மகன்: அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் மகன் : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.. 9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..? 63 ன்னு சொன்னேன் .. அப்பா : சரி அப்புறம்... மகன்: 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க .. அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ? மகன் : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க " அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் " அடுத்த நாள், மகன்: அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?" அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்.. மகன் : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு.. அப்பா : எதுக்குடா ? "மகன் : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் .. அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.. அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு . அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..? மகன் : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீன்னுதான் சொன்னேன்.. உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு .. அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் " அதற்குஅடுத்த நாள், மகன் : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா " "அப்பா : இல்லடா நாளைக்கு வரேன் " " மகன் : நீ போக வேணாம் பா " "அப்பா : ஏண்டா?" மகன்: ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க " அப்பா : ஏண்டா..? என்னாச்சுடா?" மகன் : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க " அப்பா : சயின்ஸ் டீச்சரா ..!! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?" மகன் : அதைத்தான் பா நானும் கேட்டேன் . டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க " பெற்றோரிடம் கற்றபடியே பிள்ளைகளும் வளர்கிறார்கள் பெற்றோரிடம் கேட்டதையே பிள்ளைகளும் பேசுகிறார்கள்.