சக்தி வடிவமாகப் பெண்களைக் கண்டு, சக்தி படைத்த முப்பெரும் தேவியரை நினைத்து வழிபட வருவது நவராத்திரி! அனைத்து நங்கையரும் மிக்க மகிழ்ந்து, பட்டுப் புடவை சரசரக்கப் பவனி வந்து, எட்டுத் திசைகளிலும் நட்பை அழைத்து, கொலுப்படிகளில் பொம்மைகள் வைத்து, அலுக்காது அவற்றை நன்கு அலங்கரித்து, தம் இல்லத்திற்கு வருகிற பெண்களுக்கு, நம் கலாச்சாரப்படித் தாம்பூலம் அளித்து, தினம் ஒரு வகைச் சுண்டலைப் படைத்து, நலம் வேண்டிப் பூஜைகளும் பல செய்து, நவாவரணக் கீர்த்தனைகள் பாடி மகிழ்ந்து, சுவாசினிகளாகப் பெண்களை ஆராதித்து, வண்ண மயமாகக் கொண்டாடிக் களித்து, எண்ண இனிக்க வைப்பர் இந்த நாட்களை! அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!