நலம் சில உரைப்பேன்… ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என ஒன்றுபட்டுக் கூடி வாழ்தல் நலம். இரு கரங்களால் இறையைத் தொழுதுவிட்டு, இயன்றவரை பிறருக்கு உதவுதல் நலம். முப்பாலும் இனிதுரைத்த வள்ளுவன் வழி தப்பாது வாழ்க்கை நடத்துதல் நலம். நான்கு வேதங்களைக் கரை காணாவிடினும், நான்கு நல்ல நண்பரைச் சேருதல் நலம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதென அறிந்து, இளவயது முதல் நற்கல்வி கற்றல் நலம். ஆறு முதல் அறுபது வயதுவரை, நமக்கு நல்லாசி கூறும் பெரியோரைப் பணிதல் நலம். ஏழு பிறவிக்கும் இன்ப வாழ்வு அருளும் இறைவனை, எக்கணமும் மறவாது துதித்தல் நலம். எட்டுத் திக்கும் நம் புகழ் பரவிடினும், எளிய வாழ்க்கை வாழ்தல் நலம்! ஒன்பது வாசல் கொண்ட ஓட்டைச் சரீரம் இது என்பது நிஜமென்று உணருதல் நலம். பத்தும் பறக்க வைக்கும் பசியில் வாடுவோர் கண்டால் சற்றும் தயங்காமல் உணவளித்தல் நலம்! :coffee
Hello mam, Intha rate-la poneengana Murugar unga kanavil vandhu "Ondru,irandu,moondru ena ennai varisaipaduthi paaduga" appadinu kettka porar!!!! Suuuuuuuuuuuuuuuuuuuuuuuuperappu:thumbsup :cheers Saras
பின்னிட்டீங்க.. சரஸ் சொன்ன மாதிரி முருகன் வந்தாலும் வருவார்:rotfl ரொம்ப அழகா இருந்ததுப்பா. இந்த மாதிரி எல்லாரும் இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும்? அற்புதமா இருந்தது. வாழ்த்துக்கள்.