மனங்கள் இணைகின்ற நேரம் மலரும் காயாகி கனியும் இனம் அறியமுடியாத ராகம் இதயம் இசைக்கின்ற கீதம் பார்த்து அறியாத முகங்கள் பாச நூலிலே இணையும் நீரில் நனைந்திடும் கண்கள் நெஞ்சு அன்பிலே நனையும் உறவு என்பது இறைவன் பிறப்பில் கொடுத்த நட்பாம் புரிந்து கொண்ட நட்பால் பிறக்கும் புதிய உறவாம் இதுபோல வேண்டும் கணங்கள் இணைய வேண்டும் மனங்கள் புதிய பாதைநாம் வகுப்போம் புரிந்து கொண்டுநாம் நடப்போம்