கதிரவனும் மேகங்களும் நட்சத்திரங்களும் விண்ணில் மாறி மாறி அலங்கரிப்பது போல் நீ தென்றலாய் வந்து செல்லும் நேரங்களை சிரிப்பென்னும் விண்மீன்கள் தெளித்து நிலா வந்து செல்லும் வானமாய் அலங்கரிக்கவோ உன் வருகையால் உள்ளம் என்றும் மகிழ்ந்திட கடந்து வந்த வலிகளை பகிர்ந்து தோள் கொடுத்து துயரமும் தாங்கிட்டால் தோல்வியும் ஏமாற்றமும் நிலையாக தங்கிடாது வேதனைகளனைத்தும் சட்டென மறைந்திடுமே நம்பிக்கையும் ஊக்கமும் முயற்சியும் வேரூன்றிவிட்டால் வெற்றியின் படிக்கட்டுகளில் வாழ்க்கையும் சென்றிடுமே அடைய நினைக்கும் சிகரங்களையும் தொட்டுவிடுமே ஊன்றுகோலாய் தாங்கி வாழ்வில் வசந்தத்தை வீச உறுதுணையான நட்பும் சிறந்த இலக்கணம் ஆயிடுமே