தொலைத்து விட்ட என் புன்னகையை எங்கு சென்று தேடுவேன் பசி என்று கேட்கும் முன் பால் சோறு கொடுத்தாய் என் கண்ணில் நீர் கண்டால் கதறி அழுது விடுவாய் ஆடை ஆபரணங்கள் அளவின்றி அள்ளி கொடுத்தாய் என் வலியை உன்னுள் ஈர்த்துக்கொண்ட என் உயிர் தாயே எங்கே சென்றாய் என் வலி பகிர ஆளின்றி தவிக்கிறேன் என் அன்னையே வேதனையை புதைத்து விட்டேன் உள்ளத்திலே புன்னகையை படர விட்டேன் என் உதட்டினிலே போலி புன்னகையை படர விட்டேன் என் உதட்டினிலே
உங்கள் வரிகளில் உருக்கம் நிறைந்திருக்கிறது பெரியம்மா. சற்றே வருத்தம் தருவதாகவும் படுகிறது எனக்கு. இழந்ததை மீண்டும் பெறவியலாதே! பகிர்ந்ததற்கு நன்றி. -rgs