இரவின் மௌனத்தைக் கலைப்பது மின்விசிறி மட்டுமல்ல, நீயும் தான் எங்கோ மிதக்கும் மேகங்கள் உன் முகச்சாயலில் என் மனக்கரையை நனைக்கும் எண்ண அலைகளில் நீ என் நிலாக்கரங்கள் தொடமுடியாத தொலைதூரச் சூரியன் நீ Translation: Silence of night is disturbed not only by fan, by you too clouds floating somewhere high resemble your face you are in the thought wave that wets my mind shore you are the distant sun who my(moon) hands cannot touch
உங்கள் கவி நன்றாய் இருக்கிறது ராமலக்மி. தொடருங்கள். மேலும் இதைத் தொடர்ந்து இவ்வாறு எழுதத் தோன்றுகிறது: சூரியனாய் நீ இருக்க, உன்னால் நான் ஒளி பெற்றேன். உனை அடைய முயற்சிக்கும் எனை விடுத்து ஓடுவதேன்? அபூர்வமாய் நானும் நீயும் வானமதில் தெரிந்தாலும், எதிரான திசைகளிலே எப்போதும் இருப்பதுமேன்? மாதத்தில் ஒரு நாள் நான் வருவதில்லை எனினும், அன்றேனும் எனைப் பார்க்க நீயும் வரலாகாதா? என்றைக்கும் மிக உவப்பாய் பிறருக்குத் தெரிந்தாலும், உனக்கு மட்டும் கசப்பதேன், நானென்றால் ஆகாதா? கொஞ்சம் ஏக்கமும், சோகமும் கலந்து விட்டது. மன்னிக்கவும். -rgs
மன்னிப்பதா... ஊகும்.. ரசித்ததோடு மட்டுமின்றி அனுபவித்து பதில் கவிதை அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.. மிக்க நன்றி..
ramalakshmi nice kavidhai if it s starting very well.try often and post here. you touched all the mega bites of the nature in your 8 line kavidhai keep it up mitrakannan
Very nice Rama... I got inspired by your lines..... தொலை தூர சூரியனின் ஒளியாலே.... இவ்வையகம் செழிக்குதே.... தொலை தூரத்தில் இருந்தாலும்.... உன் கிரணங்கள் எங்களை தீண்ட செய்து.... புத்துணர்ச்சி அளிப்பாய் தினந்தோறும்.... Rani.