என் கண்களை நிறைத்திடும் வண்ணமாய் என் செவிகளில் ஒலித்திடும் ரீங்காரமாய் என் நாசியில் ஏறிடும் மணமாய் என் மனதை குளிர்விக்கும் இசையாய் என் இதயத்தில் கலந்த உணர்வாய் எல்லாவற்றிலும் கருணை நீயானதால் மலரை தாங்கும் காம்பாய் உளியை தாங்கும் சிலையாய் வலியை தாங்கும் உள்ளமாய் சங்கடங்கள் சந்தோஷமாய் எழுத்துக்கள் கவிதையாய் தனிமையும் இனிமையாய் என் வாழ்க்கை உன் துணையில் தொடருதே !
ஆம், வாழ்க்கைத் தொடர்கதை தான் ! தவிர்க்க முடியாத சோகமிழையோடினாலும் ,நேர்மறை உணர்வுள்ள கவிதை நன்று, லக்ஷ்மி ! உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே - 'அவள் அப்படித்தான் ' திரைப்படப் பாடல் நினைவுக்கு வந்தது.
நன்றி பவி. உங்கள் உபயத்தில் நேற்று இந்த பாடலில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்றது என் பாடல் கேட்கும் பயணம்