தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?. தேன் கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.. ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த் தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந்தேன்! #843 அதனால் மறந் தேன் !! காலையில் கண்விழித் தேன்! அப்படியே எழுந் தேன் ! உங்களை நினைத் தேன்! தேனை எடுத்தேன்! அங்கிருந்து விரைந் தேன் ! வேகமாக நடந் தேன்! இவ்விடம் சேர்ந் தேன் ! தங்கள் வீட்டை அடைந் தேன் ! உங்களிடம் கொடுத்தேன் ! என் பணியை முடித் தேன்.!! என்றார். அதற்கு தேன் பெற்றவர் தேனினும் இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை தமிழ்த்தேன் என்று உரைத்தனரோ என கூறி tv மகிழ்ந்தேன் என்றார். படித்ததில் ரசித்தது.