Hi All, In this thread I will post the poems written by my fiancé. ஒரு வேண்டுகோள் கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை குனிந்து எடுத்த நொடியில் என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன சில பார்வைகள் கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில் எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத் தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள் கை வைத்து மறைப்பதைக் கூட அவமானப்பட்டுச் செய்கிறேன் "முன்னாலே போமா" என்று பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர் கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால் மகளிர் இருக்கையின் இடுக்குகளில் கூனிக்குறுகி என்னைப் போலவே சில திரௌபதிகள் ஒவொரு நிறுத்ததிலும் மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம் ஆனால் அடுத்த பிறவியில் ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை -முத்தாசென் கண்ணா
பொறுப்பு அப்பா சட்டையில் நாலணா எடுத்தால் கூட கோள்மூட்டிவிடவும்... சனிக்கிழமை சம்பள நாளின் தீனிகளில் பெரும்பங்கு கொண்டு ஒழுங்கு காட்டுவதும்....... அவளுக்காக பயந்து நான் அடுப்பங்கரையில் செல்பேசுவதும்.... பைசாவுக்கு கூடப் பெறாது அவளிடம் மதிப்பிழப்பதுமாக தங்கை என்று ஒருத்தி ஆனால் ஏதோ ஒரு பொறுப்பு வந்ததை தோன்றுகிறது "உன் தங்கை பெரிய மனுஷி ஆயிட்டா" என்று என் அம்மா சொன்னபோது -முத்தாசென் கண்ணா
dear friend, ungaludaiya muthal kavithai varigal,unarnthu sollappattavai. vari vadivil pethai pengalin kothippana-manithileye kothitha karuthukkalai kottiullirgal.oru nimidam ,nanum anubavithen mendum,mendum. kavithayai parrata varigal illai. ithai vida aluthamaga yarallum solle eyalathu penavalin avalanillaiyai. keep posts.
Hi Deepa, தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. நான் இங்கு பதிவு செய்தவைகள் என்னவர் எழுதிய கவிதைகள். எனக்கும் "ஒரு வேண்டுகோள்" பிடித்த கவிதைகளில் ஒன்று. - கலா
டியர் கலா, மிகவும் அருமையாக சமுதாய நடப்புகளை வெளிபடுத்திய கவிதை உங்களைவரின் முதல் கவிதை.... மேலும் அவரது கவிதை பனி தொடர எனது வாழ்த்துக்கள்....... பகிர்ந்தமைக்கு நன்றி........
ஐய்யனாரு சாவதில்லை முட்ட வந்த கெடாவ எட்டி உதைக்கப் போன என்னைய தடுத்துவிட்டு ஆத்தா சொல்லுச்சி "கூடாதய்யா அது ஐய்யனாரு" கூழு ஊத்தின நாளப்போ அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி " ஆத்தா ஐய்யனாரு செத்துப் போச்சுன்னேன்" "இல்ல மவராசா அந்தா பாரு"ன்னு குங்க மஞ்ச தடவி வச்சுருந்த கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா கைய நீட்டிச்சி என் ஆத்தா -முத்தாசென் கண்ணா
Dear Kala I dont have tamil font here. So not able to write in Tamil. Very nice Kavithai by Mr. KALA. Thanks for sharing. I appreciate his kavithai thiramai. Very nicely expressed the current activities of male in "oru vendukol". Superb & kudos to him.