[font="]1. துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன்[/font] [font="] மழைத்துளியொன்றை ஏந்தி வந்தாள்[/font] [font="]கருமை நிற தேவதை.[/font] [font="]அத்துளி பேருருவம் பெற்று [/font] [font="]ஒரு மாளிகையான தருணம்[/font] [font="]சிறுவனாகியிருந்தேன்.[/font] [font="]கண்கள் மின்ன என்னை [/font] [font="]மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.[/font] [font="]புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.[/font] [font="]நீண்டதொரு மயக்கத்திலிருந்து[/font] [font="]விடுபட்ட கணம்[/font] [font="]என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.[/font] [font="]ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்[/font] [font="]நடனமிடுகிறாள் கருமை நிற[/font] [font="]வதை.[/font] [font="][/font] [font="]2. இப்படித்தான் நீங்கள்..[/font] [font="]அனுமதியின்றி உள்நுழைந்தீர்கள்.[/font] [font="]சத்தியங்களை பொய்யாக்கினீர்கள்.[/font] [font="]நண்பர்களிடையே திரை அமைத்தீர்கள்.[/font] [font="]வேடமிட்டு அற்புதமாய் நடித்தீர்கள்.[/font] [font="]தகித்தபோது வெந்நீர் ஊற்றினீர்கள்.[/font] [font="]இல்லாத சோகத்தை அரங்கேற்றினீர்கள்.[/font] [font="]தூக்கி எறிந்ததாய் பொய்யுரைத்தீர்கள்.[/font] [font="]என் நண்பர்களின் நட்பானீர்கள்.[/font] [font="]நிலவில் எச்சில் உமிழ்வதாய்[/font] [font="]வானம் பார்த்து உமிழ்ந்தீர்கள்.[/font] [font="]இப்படியான நீங்கள்[/font] [font="]இப்போது,[/font] [font="]கடவுளின் பிள்ளை என்கிறீர்கள்.[/font] [font="]இப்படித்தான் நீங்கள்[/font] [font="]என் மனவெளியின்[/font] [font="]பட்டாம்பூச்சியாயிருந்து [/font] [font="]மெல்ல மெல்ல புழுவாக[/font] [font="]உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக![/font] [font="]- நிலாரசிகன்.[/font]
"இப்படித்தான் நீங்கள்" அப்படியா என என் சிந்தை கேட்கிறது எப்படித்தான் சிந்திக்கிறீர்களோ இப்படி எழுத???? உங்கள் வரிகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சிந்தனைத் தேன் துளிகள் !!!