ஞானத்தின் திருவுருவே உன்னை நானிங்கு பணிந்து நின்றேன் வானகம் வேண்டவில்லை நான் வாழவோர் வழிசொல்லுவாய் (ஞானத்தின் திருவுருவே...) கானகம் ஏகிடவே எனக்குள் கொஞ்சமும் சக்தியில்லை பாதமுன் சரணடைய எந்தன் பாழ்நெஞ்சில் பக்தியில்லை நீயாகக் அருள்வதன்றி இங்கு வேறொரு வழியுமில்லை வேதத்தின் பிறப்பிடமே சொல்ல வேறொரு மொழியுமில்லை (ஞானத்தின் திருவுருவே...) சொந்தங்கள் என்றேநான் ஒரு சுழலுக்குள் சிக்கி நின்றேன் அந்தகா ரத்திலுள்ள எனக்கு ஒளியும் தெரிவதென்றோ தந்தையும் நீயானாய் எந்தன் தாயுமே நீயானாய் பந்துவும் நீயானாய் உந்தன் பதநிழல் சேர்த்துவிடு. (ஞானத்தின் திருவுருவே...) வீயார்