நித்தம் நினைத்த உன்னை வேறொருவருக்கு கொடுக்க மனம் இல்லை திண்ணமாக சொல்கிறேன் - நீ என் தாரகை என்று …. நீ வேண்டும்! என்றேன் வேண்டாம் என்றது மனது தீதா நன்றா என்றேன் நீ தந்து விட்டாய் உன்னை என்றது!! நியாயத்தை சொல் என்றேன் – அது வேண்டாத வேலை என்றது தீர்வு தான் என்னவென்றேன் தண்டனை உன் ஆயுள் என்றது !! நீயாக வந்தாய் – நெஞ்சில் வேரூன்றி நின்றாய் – இது தீராத காதல் – அது உனக்கு தானாக தோன்றும்...