விடிந்தும் விடியாத பொழுது கண் திறக்க முடியாத தூக்கம் உச்சந்தலையில் எண்ணெய் வைத்து சீயக்காய் பொடி கொண்டு கரகரவென்று தேய்த்து வெதுவெது நீர் ஊற்றும் போது கண் எரிகிறதே என கூக்குரல் இடும்போது இதோ ஆச்சு என அன்புடன் அன்னை அணைக்கும் சுகத்துக்கு ஈடு இணை உண்டோ இப்புவியில் புத்தாடை அணிந்து பெரியவர்களை வணங்கி இலையின் முன் அமர்ந்து தீபாவளி பட்சணங்கள் உண்ணும் போது அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை நேற்றைய நினைவுகள் இன்றைய உணர்வுகள் அனைத்தும் கலந்த இன்பம் மிக இனிது அனைவருக்கும் இனிய என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் HAPPY DIWALI TO ALL