1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - இரவச்சம்

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Aug 18, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஆம் உண்மையே......தண்ணியில் கூட எண்ணெய் எடுத்துவிடலாம்..... நன்றி ப்ரியா....:thumbsup
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பார்த்தாக்கப் பட்டு விடும்

    ஆக்கஞ்செப்புதல் நன்றளிக்கும் - ஈந்திடும்
    உள்ளம் கொண்டோரிடம் உரைத்திட - அது
    மாறாய் தீமையும் துன்பமும் தந்திடும் - அவ்
    வீந்திடும் குணம் இல்லாதாரிடம் உரைத்திடவே

    விரிசல் கொண்ட கூரை மீது குதிப்பதுவும்
    ஈக்கும் குணம் அற்றவரிடம் இரப்பதுவும்
    உடலிலும் மனதிலும் புண் பட்டிடுமே - ஒன்று
    ஆரிடும் மற்றொன்று நமை ஆட்டிடும்


    வலிமை அற்ற மரத்தோணி - உறுதிகொண்ட
    பாறையில் மோதிட்டால் நொறுங்கிடும் - அத்
    தோணியின் நிலை தான் இருப்பதை மறைத்து
    உரைபாரிடும் சென்று இரப்பாற்கும்


    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்த்தாக்கப் பட்டு விடும். (1068)

     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்

    விளையாடிடுவோம் ஓடிடுவோம் வீதியிலே
    உடல் களைத்திடுமே தவித்திடுமே நாவதுவும்
    அண்மையுள்ள வீடு தேடி விரைந்திடுவோம்
    தாகம் தணித்திடவே பருகிடவே நீரதனை - அவர்
    ஜாதியென்ன கேட்டவுடன் பதரிடுமே ஒடுங்கிடுமே
    மேலென்றால் தந்திடுவர் கீழென்றால் மறுத்திடுவர்
    அவர் மறுத்தகணம் மனித மனம் ஒழிந்திடுமே


    வீதியிலே இரந்திடுவோர் நிலை பார்த்திடவே
    கலங்கிடுமே கண்ணும் உருகிடுமே நெஞ்சும்
    மாறாய் மனம் ஒழிந்து தான் கொள்ளும் - பொருள்
    இருந்தும் தர மனமின்றி வாழ்வாரை நினைத்திடவே


    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.(1069)

     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மனம் அது இருந்துவிட்டால்...எத்தனையோ சாத்தியம் தான்...ஆனால் மனம் வைக்க தான் சிலருக்கு மனம் வருவதில்லை
    நன்று
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நன்றி பிரியா.......மனம் இருந்தால் மார்கம் உண்டு....
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    சொல்லாடப் போஒம் உயிர்

    தன்வயிர் பிள்ளை தன்னிடம் இரந்தும்- தான்
    தன்பிள்ளையை தாங்காது கூடையில் இட்டு
    குப்பையான குழந்தையின் குமுறலை கண்டோர்
    மனமே இறந்திடும் அக்காரியம் செய்த பெண்ணின்
    உள்ளம் சென்று ஒளிய இடமும்தான் உண்டோ

    உணவை உவகையுடன் உண்டதில்லை - அவ்
    வுணவும் எளிதாய்யெங் களுக்குகிட்டிய தில்லை
    இரப்பதை இழிவாய் உணர்ந்ததினால் - அவ்
    விரப்பும் எங்களுக்கு கை வந்ததில்லை

    இயலாமையினால் இரந்திட போயினன் - அம்
    மாந்தர் இலையென்று கூறிட்ட மறைகேட்டதும்
    அவன் உயிரே அங்கு போய்விடுமே - மறுத்தாரின்
    உயிர் எங்கே தான் சென்று ஒளிந்து கொள்ளுமோ?

    கரப்பவர்க் கியாங்கொளிகும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர். (1070)

     

Share This Page