தாய்க்கு முன் தாரம்! ‘தாய்க்குப் பின்தான் தாரம்’ என்றார் நண்பர். ‘தாய்க்கு முன் தாரம் என்றாலும் தகும்’ என்றேன் நான். (என் நண்பர்களோ) “நல் மகன்கள், உன் போல், நாட்டில் இருக்கும்வரை நாதியற்றோர் (முதியோர்) இல்லங்கள் நாள்தோறும் பெருகிவரும்; பெண்டாட்டி தாசன் நீ, பொறுப்பற்ற மனிதன் நீ. பெருக்கி, விளக்கேற்றி, அவள் பாதம் வருடச் செல்” என இளக்காரம் பேசினர்; எள்ளி நகையாடினர். “தாய்மார்களே! தவறென்ன என் கூற்றில்? தாயாகும் முன்னர் நீவிரும் தாரம் தானே?” அன்புடன்,