நீரில் மட்டுமே பூக்கும் மலர் நீ - அதிலும் ஆதவனைக் காண்கையிலே விரியும் உன் இதழ்கள் அதன் மேல் பனித் துளிகள் கொள்ளை அழகு நீ அழகிய ரோஜா நிறத்திலும் புதிய வெள்ளை நிறத்திலும் இருப்பாய் - பாய் போன்ற அகன்ற உன் இலைகள் அதில் உருண்டோடும் நீர் துளிகள் வெள்ளத்தனைய நீண்ட உன் மலர்கள் அதனுடன் போட்டியிடும் இலைகள் ஆதவனுக்காக நீ மலர்ந்தாலும் ஆண்டவனுக்காக உன்னை அர்ப்பணம் செய்கிறாய். நூற்றி எட்டு இதழ்கள் உண்டாமே உனக்கு ஆண்டவனை அவன் திருநாமங்கள் நூற்றி எட்டும் சொல்லி அர்சிக்கையில் ஒவ்வொரு இதழாக சமர்ப்பணம் செய்வார்களாம்.... நீ இருந்தால் நீர் நிலைகள் அழகாகும் குளத்தை நீ மலர்களால் நிறைத்தால் உன்னை காணும் விழிகளின் பார்வையை நிறைத்தாய் அழகே அழகே ...... அனைத்தும் அழகே உன்னிடம் தேசிய மலரே ....
ஆதவனை கண்டால் மலரும் மலருக்கு ஆதவன் வந்ததால் பின்னூட்டமும் வரும் என நினைத்தேன், ஆதவன் வந்து மறையும் நேரம் கூட ஆகிவிட்டது. இன்னும் பின்னூட்டம் ஒன்றும் வரவில்லை. :spin:spin
மாதவம் செய்தனை நீ, தாமரையே நீ மாதவம் செய்தனை நீ. தமிழ் தாமரை உனைப் பற்றி கவி பாட, தாமரையே நீ மாதவம் செய்தனை நீ. கோவையில் ஆதவன் உச்சிக்குள் மறைந்துவிட்டான், எதிர்பார்த்த பின்னூட்டம் வராத காரணத்தினால், எங்கள் தமிழ் தாமரையின் கவிதை முகம் வாடிவிட்டதால், கோவையில் இன்று ஆதவன் உதிக்கவே இல்லை, பிளாடினத்தின் பளபளப்பால், பரபரப்பால். தாமதம் பொருத்தருளவேண்டும் வேணி.
அன்புள்ள நட்புக்கு, ஆதவனாய் வந்து வாடிய என் தாமரையை மலரச் செய்த நண்பருக்கு நன்றிகள் பல உங்களுக்கு. இண்டசின் கவிதைகள் உலகில் ஆதவன் நீங்கள் தான். சில நேரங்களில் சுட்டெரிக்கும் உங்கள் கவிதை கருத்துக்கள். சில நேரங்களில் சந்திரனாய் மயங்க வைக்கும் உங்கள் கவிதைகள். இரண்டிலும் சரி, உங்கள் கவிதைகள் பார்த்து மலரும் தாமரைகளும், அல்லிகளும் இங்கே அநேகம் பேர் உள்ளனர். என்னையும் சேர்த்து. எனது கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல
Ungal anaithu kavithaigalaiyum padikka padikka naan oru karpanai ulagathirkku selgiren yendru sollallaam. Ovovoru kavithai vaasikkum bodhu, adhan azhagai muzhuvadumaai unara mudigirathu... tamizh kavithai padikka inbam adhuvum veni'yin kavithai, thigattaata perinbam.... sandhya
Dear Veni I agree with what Sandhya has written. since few days I am not able to give fbs to your post as I am busy with something or other love viji
அன்புள்ள சந்தியா, கற்பனையில் மூழ்கினாலும், கவனித்து பின்னூட்டம் கொடுத்த தோழிக்கு நன்றிகள் பல. இந்த மாதிரி பின்னூட்டங்கள் தான் என்னை மேலும் மேலும் பல கவிதைகள் எழுத நல்ல ஊட்டம். நன்றிகள் தோழி
Anbulla Viji Maa, Neengal late-aga vanthaalum, neengal vanthathe enakku magilchithaan amma. Ungal pinnoottam kandu magildhen, nandrigal pala ungalukku