அன்பு உள்ளங்கள் உன் ஆசை முகம் கண்டால் இன்பத்தில் திளைத்திங்கே ஈந்திடுவர் முத்த மழையே - உந்தன் பிஞ்சுக் கண்ணத்திலே !! ஊறிடும் நாவதன் அசைவினில் எச்சிலுடன் முதல் சொற்களும் பிறக்க ஏட்டினில் பொறித்து வைத்தேன் - அவற்றை ஐசுவரியமாய் நெஞ்சில் காத்து வைத்தேன் !!! ஒயிலாக நீ அமர்வதும் ஓடியாடி துள்ளித் திரிவதும் ஒளவி நீயும் தட்டி கொட்டி உண்ணும் அழகைக் காண கிடந்தேன் தவம் !! பெற்றேன் வாழ்வில் உயர் வரம் !! நலமாய் வளமாய் நீயும் வாழ இறைவனிடம் இறைஞ்சுவேன் - கோடி தரம் !! பி.கு. ஒளவி - வாயால் பற்றி