[h=2]த்ரிஷாவின் இடத்தைப் பிடித்தார் கேத்தரின்தெரசா[/h]- - – செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்புத் தொடங்குகிற நேரத்தில் படத்திலிருந்து விலகிக்கொள்வதாகச் சொல்லிவிட்டார் த்ரிஷா. – மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்தரின் தெரசாவின் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று செல்வராகவன் சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கும் அவர் என்றால் ஓகே. எனவே, சிக்கல் தீர்ந்தது என்று அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். மே 13 இலிருந்து அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். – ————————————–
- - ஆடை குறைப்பு விஷயத்தில் விட்டுக்கொடுத்து நடித்து வந்தாலும், படுக்கையறை காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கம் காட்டுவதற்கு தடை போட்டு வந்தார் ஹன்சிகா. -ஆனால், சிம்புவுடன் அவர் நடித்துள்ள, வாலு படத்தில், படுக்கையில் கட்டிப்புரளும் காட்சியொன்று உள்ளது. அக்காட்சி படமாக்கப்பட்டபோது, சிம்புவுடன் காதல் வயப்பட்டிருந்த நேரம் என்பதால், நடிப்பு என்றே தெரியாத அளவுக்கு, இருவரும் அக்காட்சியில் பின்னி பிணைந்து நடித்தனர். - அதனால், அக்காட்சி, வாலு படத்தின் ஹைலைட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் சிம்பு. ஆனால், தற்போது, சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டுள்ள ஹன்சிகாவோ, அக்காட்சியில் அளவுக்கதிகமாக நெருக்கம் காட்டி நடித்ததை எண்ணி வருந்துகிறார். போனதை நினைத்து, ஆவப் போவது என்ன? – ————————————— — எலீசா