தமிழ் கிறுக்கன் கிறுக்கிய அழகே!!!! முடிந்திடும் முற்றுப்புள்ளியாய் ஒற்றையில் நின்றேன் தொடர்ந்திடும் முற்றுப்புள்ளிகள் அருகினில் வைத்தாய் தனிமையில் கானங்கள் கேட்டிடும்பொழுது தாளங்கள் என் விரல் போட்டிடும் பொழுது உன் விரல் பட்டு வீணையும் சிலிர்க்க சிலிர்த்திடும் வீணை இதமாய் ஒலிக்க இதயமும் இமைகளும் சில நொடி தன் பணி மறக்கும் முன்பனி வரையில் முகிலதன் முதுகினில் பறக்கும் உன் மதிமுகம் காண மதியமும் மறுமுறை இரவினில் வரும் வியந்திடும் அழகு சுடும் பரிதிக்கும் வியர்வையைத் தரும் உன் செதுக்கிய அழகை தமிழால் கிறுக்கிய நான் சிலருக்கு கவிஞன் பலருக்கு கிறுக்கன் ------ நிரஞ்சன்