வியந்தேனடி உன்னை கண்டு அன்பே அரவனைகையில் அன்னையாகிறாய் தட்டி கொடுத்து பாராட்டுகையில் தந்தையாகிறாய் விட்டு கொடுத்து போகையில் தமக்கையாகிறாய் முட்டி கொண்டு நிற்கையில் தங்கையாகிறாய் தோள் சாய்கையில் தோழியாகிறாய்இன்னும் எத்தனை பரிமாணங்கள் தான் உள்ளது உன்னிடம்? இது மட்டுமா ? தண்டனைக்கு தான் முதல் என்பாய் மற்றவை தமக்கை முதல் என்பாய் உண்மை உரைக்கிறேன் வயதில் மட்டும் தானடி நான் உன்னை விட பெரியவள் மனதிலும், குணத்திலும் என்னை விட பெரியவள் நீயே
தேன்மொழி கவிதை மிக அருமை .நானும் ஒரு வருடத்துக்கு முன் என் தங்கையை பற்றி சகோதரி என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.படித்து பாருங்கள்.