செங்கல்லா கனக்குதடி..

Discussion in 'Jokes' started by malarvizhi, Apr 28, 2011.

  1. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    செல்லம்மா, சிணுங்கலா
    சிரிச்சுப் பேச நீ அழைச்சா
    மெல்லிசையால என்னிடம்
    மெதுவாக சொல்லிவிடும்..!
    -
    சுள்ளுன்னு கோபத்தோட
    சூடாகி நீ கத்தினா
    பொல்லாப்பு வேணாம்னு
    பொசுக்குன்னு ஆப் ஆகும்
    -
    சொல்லாம என்னைப் பார்க்க – நீ
    தூரத்தில் வரும்போதே
    துள்ளலிசை அலாரத்தால் என்
    தூக்கத்தைச் கலைத்து விடும்!
    -
    வெள்ளமா வந்து விழும்
    வேண்டாத, ‘எஸ்.எம்.எஸ்’,ஐ
    தள்ளிவிட்டு, நீ அனுப்பும்
    வெல்லக்கட்டி சொல்லை மட்டும்
    சல்லடைபோல் சலித்தெடுத்து
    உள்ளுக்குள்ள சேர்த்து வைக்கும்..!
    -
    மல்லிகையே மரிக்கொழுந்தே
    பல்லக்கேன்னு எல்லாம் – பொய்
    சொல்லி சொல்லி அலுத்துப் போய்
    சும்மா விளையாட்டுக்கு – நான்
    வில்லங்கமாக் கேலிப்பேச…
    -
    விளங்கிக்காம என்கிட்டே
    மல்லுக்கு நின்னுக்கிட்டு – நீ
    மாசக்கணக்காப் பேசாததால
    செங்கல்லா கனக்குதடி – என்
    செல்போன்..!
    ===========================

    >பனசை நடராசன்
    நன்றி: தமிழ்முரசு 30-1-11
     
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    :) Just remembering those early days when cellphone was a luxury and each one weighed like a brick, Malarvizhi.
    But this one made me smile a bit. Thanks for sharing. -rgs
     

Share This Page