செல்லம்மா, சிணுங்கலா சிரிச்சுப் பேச நீ அழைச்சா மெல்லிசையால என்னிடம் மெதுவாக சொல்லிவிடும்..! - சுள்ளுன்னு கோபத்தோட சூடாகி நீ கத்தினா பொல்லாப்பு வேணாம்னு பொசுக்குன்னு ஆப் ஆகும் - சொல்லாம என்னைப் பார்க்க – நீ தூரத்தில் வரும்போதே துள்ளலிசை அலாரத்தால் என் தூக்கத்தைச் கலைத்து விடும்! - வெள்ளமா வந்து விழும் வேண்டாத, ‘எஸ்.எம்.எஸ்’,ஐ தள்ளிவிட்டு, நீ அனுப்பும் வெல்லக்கட்டி சொல்லை மட்டும் சல்லடைபோல் சலித்தெடுத்து உள்ளுக்குள்ள சேர்த்து வைக்கும்..! - மல்லிகையே மரிக்கொழுந்தே பல்லக்கேன்னு எல்லாம் – பொய் சொல்லி சொல்லி அலுத்துப் போய் சும்மா விளையாட்டுக்கு – நான் வில்லங்கமாக் கேலிப்பேச… - விளங்கிக்காம என்கிட்டே மல்லுக்கு நின்னுக்கிட்டு – நீ மாசக்கணக்காப் பேசாததால செங்கல்லா கனக்குதடி – என் செல்போன்..! =========================== >பனசை நடராசன் நன்றி: தமிழ்முரசு 30-1-11
Just remembering those early days when cellphone was a luxury and each one weighed like a brick, Malarvizhi. But this one made me smile a bit. Thanks for sharing. -rgs