சீரடிசெல்லும் பாதையிலே என் சிந்தையும் இருக்கிறது - அங்கு ஆட்சி புரியும் அண்ணலைக் காண இதயமும் துடிக்கிறது (சீரடிசெல்லும் பாதையிலே) ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர் சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார் ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர் சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார் மானுடம் வாழ மண்மேல் வந்த மன்னவன் நகரல்லவா – அவர் வாழ வைத்திடும் காவல் தெய்வம் அன்னைக்கு நிகரல்லவா (சீரடிசெல்லும் பாதையிலே) என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ என்னுடன் நிஜத்தில் இருக்கின்றாயென நானும் நினைக்கின்றேன் என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ என்னுடன் நிஜத்தில் இருக்கின்றாயென நானும் நினைக்கின்றேன் சின்னவன் செய்த தவறுகள் பொறுத்து காத்திடவே வேண்டும் நான் தினமும் உன்மேல் செந்தமிழ் பாடல்கள் யாத்திடவே வேண்டும் (சீரடிசெல்லும் பாதையிலே)
மிகவும் நன்றாக இருந்தது வெங்கடேஷ்! வாழ்த்துக்கள்! ஆயிரம் காதம் பயணமென்றாலும் ஓரடியில் தொடங்கிடும் அது தானே! பல்லாயிரம் பேரின் துயரமென்றாலும் சீறடியில் தொலைந்திடும் அவை தாமே! உள்ளோர், இல்லோர் என அனைவருமே உடன் நாடுவதும் என்றும் உனைத் தானே! உள்ளம் உருகிட உனைத் துதித்ததுமே, உடன் பொழியும் உன்னருள் அவர் மீதே! இல்லையென்றே உன்னிடம் வருவோர் குறை இல்லை என மகிழ்ந்தே திரும்பிடுவார்! உன் பெயரே மந்திரமென உச்சரிப்பார் வாழ்வில் நலமெல்லாம் அவர் பெறுவார்! சிறு அகல் ஒளியும் பேரிருளை விரட்டி விடும்; நாங்களும் அது போலே உன் பெயரைச் சொல்லிட விரைந்தோடும் எம் கசடும், தீமையும் புகை போலே!
அழகிய கவிதை வெங்கடேஷ்! பாராட்டு்கள். 'நகரல்லவா, நிகரல்லவா' சொற்களை 'நகரன்றோ, நிகரன்றோ' என்று மாற்றினால் ஓசை மேலும் சிறக்கும். ரமணி