1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 3, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....

    1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
    திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

    2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
    ஐப்பசி பவுர்ணமி

    3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
    தட்சிணாமூர்த்தி

    4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
    திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

    5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
    திருக்கடையூர்

    6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
    பட்டீஸ்வரம்

    7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
    திருமூலர்

    8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
    திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

    9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
    துலாஸ்நானம்

    10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
    கடைமுகஸ்நானம்
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
    கோச்செங்கட்சோழன்.

    12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
    நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

    13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
    சிதம்பரம்

    14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
    காசி

    15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
    திருவண்ணாமலை

    16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

    17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
    மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

    18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
    சின்முத்திரை

    19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
    சுந்தரர்

    20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
    ஸ்ரீசைலம்(ஆந்திரா)..
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
    ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

    22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
    திருவண்ணாமலை

    23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
    திருமங்கையாழ்வார்

    24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
    பரணிதீபம் (அணையா தீபம்)

    25. அருணாசலம் என்பதன் பொருள்...
    அருணம்+ அசலம்- சிவந்த மலை

    26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
    ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

    27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
    பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

    28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
    1997, டிசம்பர் 12

    29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
    திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

    30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
    சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
    24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

    32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
    அனுமன்

    33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
    திருவாசகம்

    34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

    அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

    35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
    அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

    36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
    108

    37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
    காரைக்காலம்மையார்

    38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
    அப்பர்(திருநாவுக்கரசர்)

    39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
    ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
    முயலகன்

    40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
    குற்றாலம்
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
    குற்றாலம்

    41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
    சங்கார தாண்டவம்

    42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
    வெள்ளியம்பலம்(மதுரை)

    43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
    பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

    44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
    திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

    45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
    களி.

    46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
    தாயுமானசுவாமி

    47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
    காளஹஸ்தி

    48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
    பிருங்கி

    49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
    பத்தாம் திருமுறை

    50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
    திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது..
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
    மேலான செல்வம்

    52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
    கஞ்சனூர்

    53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
    12

    54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
    சுந்தரானந்தர்

    55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
    ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

    56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
    திலகவதி

    57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
    சேரமான் பெருமாள் நாயனார்

    58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
    வள்ளலார்

    59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
    மங்கையர்க்கரசியார்

    60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
    அரிமர்த்தனபாண்டியன்
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
    மகேந்திரபல்லவன்

    62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
    தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

    63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
    எட்டு

    64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
    மாசி தேய்பிறை சதுர்த்தசி

    65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
    4 கால அபிஷேகம்

    66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
    நமசிவாய

    67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
    சிவாயநம

    68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
    திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

    69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
    அருவுருவம்

    70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
    ராமேஸ்வரம்
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
    தட்சிணாமூர்த்தி

    72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
    12

    73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
    குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

    74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
    வில்வமரம்

    75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
    மானசரோவர்

    76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
    81

    77.பதிகம் என்பதன் பொருள்...
    பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

    78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
    சிவஞானபோதம்

    79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
    டமருகம் அல்லது துடி

    80.அனுபூதி என்பதன் பொருள்....
    இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
    மதுரை மீனாட்சி

    82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
    மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

    83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
    தடாதகைப் பிராட்டி

    84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
    நான்மாடக்கூடல், ஆலவாய்

    85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
    கடம்ப மரம்

    86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
    கடம்பவனக் குயில்

    87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
    திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

    88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
    குமரகுருபரர்

    89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
    மகாகவி காளிதாசர்

    90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
    சித்ராபவுர்ணமி..
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
    ரோஸ் பீட்டர்

    92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
    ஜுரகேஸ்வரர்

    93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
    மாணிக்கவாசகர்

    94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
    இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

    95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
    சூலைநோய்(வயிற்றுவலி)

    96.அம்பிகைக்கு உரிய விரதம்....
    சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

    97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
    தோணியப்பர்(சீர்காழி)

    98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
    திருநாவுக்கரசர்

    99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
    சுந்தரர்

    100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
    சேக்கிழார்
     

Share This Page