சின்னதாக சிருங்காரம் சிதறிடுவாள் சில நேரம்..... சிறு ஊடல் கொண்டு சிவுக்கென முகம் திருப்பி சினம் காட்டுவாள்... சிட்டுக் குருவியாய் சிறகு விரிப்பாள் சிற்றோடைச் சிரிப்போடு.... சிந்தைக்கினிய என் சின்னக்கண்ணம்மா!!!
ஆண்டவா ! நான் வசிட்டனும் அல்ல, என் வார்த்தை வாக்கும் அல்ல ! நான் மிகச் சிறியவள் ! தயை கூர்ந்து என்னைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம், கார்த்திகா! இந்தத் தளத்தின் பிராந்திய மொழிக் கவிதைப் பகுதியில் அனைவரும் தோழமையுணர்வோடே பழகி வருகிறோம், அதையே நானும் விரும்புகின்றேன், நீங்களும் ஏற்பீர்களென்று நம்புகின்றேன்.. தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி !
தேவதை தெருவை அடைத்துத் தேர் கோலம்.... சாணி மெழுகி செம்மண் கரையிட்ட நெளிவுக் கோலம்.... ஈர சிமெண்ட் படிகளில் சிறு சிறு கோலம்.... அலட்சியமாய் ஒட்டப்பட்ட அப்பார்ட்மெண்ட் ஸ்டிக்கர் கோலம்... எல்லாம் விட..... அருகிலும் தூரத்திலும் வரையப்பட்ட குட்டி மீன், நிலா நட்சத்திரம் சொல்லும் மகளென்னும் தேவதை இருக்கும் வீட்டை!!!!!