என்றைக்கும் மாறாதிருப்பதுவே, எத்தனை யுகமாயினும் நிலைப்பதுவே, சத்தியம் என்பதனை அறிவீரே! நித்தியமும் அது என்றுரைப்பாரே! அதைத் தேடுவதே தன் குறிக்கோளாய், மிகச்சிறு வயதில் தொடங்கியவருமே பெரும்புகழடைந்தே நிலைவிண்மீனாய், வானில் வட திசை நிற்கின்றாரே! தனக்குள் தெளிவதிலே தொடங்கி, தளை யாவும் துணிந்தே எதிர்கொண்டு சமரசம் செய்யாதே தினம் இயங்கி வருவார்க்கே புலப்படும் அது நன்று! சிறுமை அதனை என்றும் அண்டாது! வறுமை நிலையிலும் அது மாறாது! ஒருமை கொண்டவரை விலகாது! வெறுமை அவர் வாழ்வில் இருக்காது!