இருள் பிரியா விடியலிலே விரியும் வாசல் மாக்கோலம் ! காலாற நடக்கின்ற சோலையெல்லாம் பூக்கோலம் ! வாடைக்காற்று வீசுகின்ற ஓடை எல்லாம் நீர்க்கோலம் ! கீழ்வானம் சிவக்க வரும் வாழ்வருளும் கதிர்க்கோலம் ! தாகமது தீர்த்திடவே மேகம் கொட்டும் மழைக்கோலம் ! தென்றல் தவழ் வேளையிலே மன்றல் எங்கும் சுகக்கோலம் ! அலைகடலின் ஆழத்திலே நிலை கொள்ளும் அமைதிக்கோலம் ! வசந்தம் வீசையிலே இந்த பூமியெல்லாம் புதுக்கோலம் ! எண்ணிப் பார்க்கையிலே , மனிதன் வாழ்க்கையிலே , இறைவன் போட்டுவைத்தான் நிறைவான காலக்கோலம் ! கொஞ்சிச் சிரிக்கும் பிஞ்சின் கன்னக்குழிக்கோலம் ! பள்ளிப் பருவத்தில் சுகம் அள்ளுகின்ற இன்பக்கோலம் ! இளமைப் பருவத்திலோ காளை நெஞ்சின் குறும்புக்கோலம் ! காதல் வயப்படுகையிலே , மோதும் விழி நாணக்கோலம் ! கனவுகள் வளர்த்தபடி கன்னி காணும் மணக்கோலம் ! தாய்மையுற்ற நேரத்திலே வாய்க்கும் கைக்கு வளைக்கோலம் ! தொண்டு செய் பருவத்தில் நீண்டதொரு கடமைக்கோலம் ! ஓய்வான முதுமையிலே சாய்வு தேடும் தோள் கோலம் ! அமைதி தேடும் நேரத்தில் அமைந்து விடும் தவக்கோலம் ! ஆட்டமெலாம் முடிந்து உயிர் ஓட்டம் விடும் நிறைவுக்கோலம் ! காலம் நமக்குத் தரும் கோலம் அனைத்திலுமே, சீலமாய் வாழ்ந்திட்டால் ,ஞாலப் புகழ் பெறலாம் !
ஆஹா எத்தனை விதமான கோலங்கள் .மனதை கொள்ளை கொள்ளும் அழகிய கோலம் .நேர் புள்ளியோ ஊடு புள்ளியோ இணைக்கும் விதமாக இணைத்து விட்டால் நேர்த்தியான கோலம் பளிச்சிடும் .வார்த்தை புள்ளிகளை நேர்த்தியாக அமைத்து அழகிய கோலம் படைத்து விட்டீர்கள் பவித்ரா
"நேர்"மைக் கோலமது கலைந்துவிட்டால் மனமெல்லாம் அலங்கோலம் ... "ஊடு"ருவும் அன்புக்கோலம் தான் வாழ்வின் ஆதாரக்கோலம் !! நன்றி @periamma , என்றும் அன்புடன், பவித்ரா
Wah reh wah what a talent, so beautiful, lovely lines written in lovely tamil, I wish I could write like you in tamil. Last lines some words are new to me can you help me knowing the meaning. Keep posting ! I'm enjoying reading all of your poems!
@ayyasamy1944 , :thankyou2: @Poetlatha , Thank you . Seelam means ozhukkam and here I used it to denote living with principle and Gnaalam means world. Is this is what you meant ? Regards, Pavithra
Yes Pavithra thank you for the prompt response! Azhagiya tamizhil yennama Kavidhai mazhai pozhighirirghal! Thanks again for conveying the meaning.