1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோடை நோய்களிலிருந்து தப்பிக்க....

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 4, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கோடை நோய்களிலிருந்து தப்பிக்க....

    வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால், பருக்கள் எளிதாக தோன்றும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது; அப்படிச் செய்தால், பருக்கள் அதிகமாகும்.

    * நாம் பயன்படுத்தும் படுக்கை, தூய்மையான காட்டன் தயாரிப்பாக இருக்க வேண்டும். உடலுக்கு சூடு ஏற்படுத்தக்கூடிய பொருட்களாலான படுக்கையில் தூங்குவதை தவிருங்கள்.

    * கோடையில், கண்சோர்வு மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை அலசுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.

    * வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழந்து, சருமம் வறட்சி அடையும். இதனால், வியர்க்குரு, சிறு சிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னையை தவிர்க்க, சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்லலாம்.

    * வெயிலில் வெளியே செல்லும் போது, கையில் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக் கொள்வது அவசியம். இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேனை, தண்ணீரில் கலந்து வைத்தும் குடிக்கலாம்.

    * கோடை காலத்தில், தலைசுற்றல், வாந்தி மற்றும் உடல் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே உஷாராகி விடுங்கள். இவையெல்லாம், அதீத வெயில் காரணமாக, உங்கள் உடல், அபாய எல்லையை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறி. இதைக் தடுக்க, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.

    * பிறந்த குழந்தைகளுக்கு உடம்பு அதிகம் சூடாகி விடும். உடல் உஷ்ணத்தை குறைக்க, துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உடம்பை துடைத்து, காற்றோட்டத்தில் படுக்க வைக்கலாம். சூடு மிகவும் அதிகமானால், 'பிட்ஸ்' வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நேர்ந்தால், உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள், வெளியில் சென்றால், கையில் குடை, தொப்பி, தண்ணீர் பாட்டில் மற்றும் உப்பு கலந்த மோர் எடுத்துச் செல்ல வேண்டும். இளநீர் மற்றும் பிரஷ் ஜூஸ் குடிக்கலாம்.

    * தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருக்கும்.

    * தலைக்கு குளித்தவுடன் நன்றாக துவட்ட வேண்டும்.

    * உள் பாவாடை, ஜட்டி மற்றும் எலாஸ்டிக் வைத்த பிரா இவற்றை இறுக்கமாக அணிவதால், அந்த இடத்தில் வியர்வை உறிஞ்சப்படாமல், 'பங்கஸ் மற்றும் இன்பெக் ஷன்' ஏற்படும். அதனால், தரமான பருத்தியாலான உள்ளாடைகளை அணியுங்கள். சாதாரண சோப்பு போட்டே குளிக்கலாம். தினமும், இரு வேளை குளித்தாலே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.

    * கோடைக் காலத்தில், வயதான சிலருக்கு பசி, ருசி, தாக உணர்ச்சி குறைந்து விடுவதால், தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவர். இது, சிறுநீர் பிரச்னை, நீர் இழப்பு என, அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை முதல் இரவு வரை, இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.

    * வயதானவர்கள் சிலர், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாகி, பேச்சு எங்கோ திசை திரும்பிவிடும். தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், உப்பு கலந்த மோர் இரண்டு டம்ளர் கொடுத்தாலே, சரியாகி விடுவர்.

    * கையில் எப்போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்திருங்கள். தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ், கிர்ணி மற்றும் இளநீர் தினமும் எடுத்துக் கொள்வது அவசியம்.

    * காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியில் போவதை தவிர்ப்பது நல்லது.
    இவற்றை பின்பற்றினால் வெயில் காலமும் சுகமே!
     
    tljsk, PavithraS, jskls and 2 others like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Thanks for sharing . Very useful information
     
    krishnaamma likes this.
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you Uma, Thank you Jaya ma :)
     
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Dear Tamil loving friends,
    Dr.krishnamma has suggested a bundle of remedies to protect yourself from scorching heat of summer-especailly in Chennai.
    I suggest a very simple remedy.No need to buy girni watermelon, cucumber, fruits etc.
    Simply read the following kavithai.All your head aches will vanish-gone-poyindhi

    கத்தரி வெய்யிலில் தலை சுற்றுகிறதா ?கவலை வேண்டாம்.கீழே உள்ள கவிதையைப் படியுங்கள்.
    வீமனுக்கு மைந்தனார் வேதனாகும்
    வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும்
    காமனுக்கு மைந்தன் வீமன் தம்பி
    கந்தனுக்கு மாமனார் காமன் தானே
    மாமனுக்கு முன் தமையன் தந்தை காலன்
    வையகத்தில் இம்முறை வழங்கலாலே
    ராமனுக்கு சீதை தங்கை தானே?
    ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே ?

    என்ன? தலை சுற்றல் நின்றதா ?
    பொறுமை இருந்தால் கீழே உள்ள பொருளைப் படிக்கவும்.

    1 வீமனுக்கு மைந்தனார் வேதனாகும்
    வீ =பறவை, மன்= மன்னன் -கருடனுக்கு மன்னன் திருமாலின் பிள்ளை பிரும்மா
    2 வேதனுக்கு மைந்தனார் ஈசனாகும்
    வேல்+தனக்கு = வேதனுக்கு
    வேல்= மூங்கில்
    -திருநெல்வேலியில் மூங்கில் காட்டில் புதையுண்டு சிவன் வெளிப்பட்டதால் ,மூங்கிலின் மகன் ஆனார்.
    3 காமனுக்கு மைந்தனார் வீமன் தம்பி
    கா=சோலை ,கற்பகச் சோலையின்
    தலைவனான இந்திரனின் புதல்வன் வீமனின் தம்பியான அர்ஜுனன்
    4 கந்தனுக்கு மாமனார் காமன் தானே
    காமன்=சோலையின் தலைவன் இந்திரன் மகள் தேவயானியை மணம் செய்து கொண்டான் கந்தன்
    5 மாமனுக்கு முன் தமையன் தந்தை
    காலன்
    மா=குதிரை ,மன்=தலைவன்
    குதிரையின் தலைவன் நகுலனின் அண்ணன் தருமனின் தந்தை காலன் (யமன்)
    6 உலகில் இந்த உறவு முறை அனுசரிக்கப் படுவதால்
    7 ராமனுக்கு சீதை தங்கை தானே ?
    ரா +மன் =இரவின் தலைவனாகிய சந்திரன்
    பாற்கடலைக் கடையும்போது முதலில் தோன்றியது சந்திரன் ,பின்னால் தோன்றினாள் மகாலட்சுமி .எனவே சந்திரனின் தங்கை மகாலக்ஷ்மியான சீதை
    8 ராவணனுக்கு தகப்பன் ராமன் தானே ?
    ரா +வண்ணன் =இரவு நிறம் கொண்ட
    மன்மதன்
    மன்மதனுக்குத் தந்தை திருமால் ,அதாவது திருமாலின் அவதாரமாகிய ராமன் .

    என்ன ,அக்னி நட்சத்த்ரமே தேவலாமா ?

    Ennaith thittatheergal. The poem appears in 'pazham paadal thirattu".After going through tamizh agarathi, and putting two and two together,I arrived at the meaning.But surprisingly a Tamil pundit endorsed the correctness of the meanings.

    jayasala 42
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமை ஆனால் படித்ததும்................. faint.gif ............. stretcher-smiley-emoticon.gif ..............[​IMG][​IMG][​IMG]
     
  7. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    Mami,

    Thalai sutravillai, mayakkam potte kizhe vizhundhuvitten...

    OMG, Nice tonic and nice way to wake up and go to work...
    All the depression, gone, poye pochu, poyindhe...
    Lol,
    Thanks a lot,
    Vaidehi
    Tagging @jskls , @kaniths
    Ta
     
    Last edited: Apr 6, 2016
    PavithraS and jskls like this.
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks for the tag but somehow I didnt get notification @vaidehi71

    Krishnamma thanks for sharing useful tips. But do you have any tips to keep the body warm in cold weather?

    @jayasala42 thanks for sharing and translating a nice poem. Had a good laugh.
     
  9. vaidehi71

    vaidehi71 IL Hall of Fame

    Messages:
    2,421
    Likes Received:
    3,184
    Trophy Points:
    335
    Gender:
    Female
    What do you mean by didn't get notification?
     
  10. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    No alert recieved. I casually saw this
     

Share This Page