கேட்டதும் கிடைத்ததும்! வேடிக்கையாகப் பொழுது போக்குவதையே வாடிக்கையாகக் கொண்டவன் ஒருவன். பள்ளிப் படிப்பிலும் கவனம் இல்லாமல், துள்ளிக் குதித்து, விளையாடி மகிழ்ந்தான்! ஆண்டுகள் உருண்டு ஓட, இவனும் வளர்ந்து ஆண் மகனாகி, வேலைக்கு அலைந்தான். உல்லாச வாழ்க்கை வாழ நினைத்தவன், செல்லாக் காசாகிப் போனதில், உடைந்தான்! பெரிய ஒரு ஞானியின் உரைகள் ஒரு முறை பெரிதாகத் தன் காதில் விழ, கவனித்தான். இறைவனை முழுதாய் நம்பி வேண்டினால், குறையின்றி அவனும் அருளுவது அறிந்தான். ஒருமனதாகத் தினம் தியானம் செய்தான்; ஒரு நாள் இறைவனை நேரில் கண்டான்! சுற்றிலும் இளம் பெண்களும், தான் ஊர் சுற்றி வரப் பெரிய வாகனமும், மேலும் பை நிறையக் காசும் தினமும் வேண்டுமெனப் பைய வரம் கேட்டவனை, இறைவன் நோக்கினார்! ‘அவ்வாறே ஆகட்டும்’, என்று உரைத்த அவரும், இவ்வாறு அவனுக்கு வேலையை அமைத்தார்! சில்லறைக் காசுகள் பையை தினம் நிறைக்க, சில்லென்று குளு குளுப் பேருந்து கிடைக்க, சுற்றிலும் இளம் பெண்கள் நடந்தனர் – அதில் சுற்றி வந்த இவனே, அந்தப் பேருந்தின் நடத்துனர்! :rotfl ... :thumbsup
மிகவும் அருமை!!! நன்றாக ரசித்தேன்!!!...இறுதியை என்னால் யூகிக்க முடியவில்லை!!! It was so different!!! Keep rocking :thumbsup