குரலோவியம் மனதை வருடும் மெல்லிசையாய் தென்றலும், இதயம் வருடும் இன்னிசையாய் என்னவளின் குரலும், நேரம் போவதே தெரியாமல் நித்தமும் அவளின் குரலை ரசிக்க, ஆத்மார்த்தமான அன்பினால் அர்த்தமில்லா வாழ்க்கை ஓவியம் ஆகிறது.
அன்புள்ள ஜே வீ, கவிதை மிகவும் அருமை நண்பரே. எப்போதும் போலவே இப்போதும் இனிமை நிறைந்த கவிதை. அது சரி நேரம் போவது தெரியாமல் அவள் குரலையே கேட்டுக் கொண்டிருந்தால், அலுவலகத்தில் வேலை பார்ப்பது எப்போது???? :hide:
காதல் மன்னனாய் மாறிய நட்சின் கவிதை அருமை! சீனியர் இந்த விஷயத்தில் தாங்கள் தானே என்ன தான் மனைவியை பற்றி ஓட்டினாலும் காதல் அப்பப்ப வெளிப்பட்டு தான் தீரும் நண்பரே!~:drowning
நீயும், சந்தியாவும் காதல கம்ப்ளீட்டா குத்தகைக்கு எடுக்கறதுக்கு முன்னாடி, நாங்களும் கொஞ்சம் ஏதாவது எழுதிக்கிரோமே ப்ளீஸ்.