கண்ணனை கார்மேகவண்ணனை கொஞ்சி விளையாட ஆசை சீடை முறுக்கு அப்பம் அவல் வைத்து அன்புடன் அழைத்து பார்த்தேன் அவன் வரவில்லை கலயம் நெறைய வெண்ணெய் நிரப்பி உறியில் வைத்து ஒளிந்து நின்று எட்டி எட்டி பார்த்தேன் அவனை காணவில்லை கெஞ்சினேன் கதறினேன் அவன் மசியவில்லை சோர்ந்து அமர்ந்திருந்தேன் யாரோ கூப்பிடும் குரல் கேட்டேன் அங்கும் இங்கும் தேடினேன் ஆள் அரவம் இல்லை மீண்டும் அதே குரல் முட்டாள் பெண்ணே உன் மனத்தில் எனை சிறை வைத்து விட்டு வரவில்லை வரவில்லை என்று அழுது புலம்புகிறாயே ஊனக்கண்ணால் தேடுவதை நிறுத்து ஞானக் கண்ணால் உற்று பார் நான் உன்னுள்ளே என்றும் நிலையாக இருக்கிறேன் என் குழலோசையே உன் சுவாசக்காற்று அனுபவித்து கேள் எனை உணர்வாய் நீ
கண்ணனை எங்கு காண வேண்டுமென்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ! மன அழுக்குகள் நீங்கி, இதயம் நிர்மலமாகி, ஞானக்கண் திறந்து அந்தப் பரம்பொருளைக் காணும் பேறு எல்லோர்க்கும் கிட்டட்டும் !
நன்றி பவித்ரா.பேரப் பிள்ளைகள் என் லேப்டாப்பில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் .அதனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை .