முறிந்த மட்டையை மாற்றிக் கொடுக்க மூன்று பேர் ஓடி வந்தார்கள். பதினொருவரின் எச்சில் பட்ட பந்தில் முகவாயில் அடி வாங்கிய முன்னணி மட்டையாளர் அநியாயமாய் விக்கெட்டை இழந்தபின் அழகாய் ஆடிக்காட்டினான் விளம்பரத்தில் ஒருவன் ஆடாமல் இருந்தவனுக்கு கூட ஐந்து லட்சமாம் ஓலைக் குடிசையில் கறுப்பு வெள்ளையில் பார்த்துவிட்டு காலையில் ஒருவன அனாவசியமாய்ச் சொல்லிவிட்டுப் போனான் "இந்தியா அநியாயமா தோத்துப் போச்சாம்" -முத்தாசென் கண்ணா
கலா, அருமையான கூக்லி கவிதை, அடித்ததோ மனதில் சதம். ஆடியும் ஆடாமல் இருந்தால், லகரங்கள் அல்ல கிடைப்பது கோடிகள்.