எண்ண எண்ண இனிக்கும் சிறு பிள்ளை கண்ணன் என்பதில் ஒரு ஐயமுமில்லை! கொல்லுவான் மாமன் என்ற அச்சத்தால், கொண்டு சென்றான் தந்தை, கூடையில் பிஞ்சுக் குழந்தைக் கண்ணனை வைத்து, அஞ்சும் நெஞ்சோடு ஆற்றினைக் கடந்து! ஆதி தேவனைக் காக்க, குடையாக வந்து, ஆதிசேஷனே காத்தான் மழையிலிருந்து! அன்றைய பெரு மழையை நாம் நினைக்க, இன்றைய மழை சென்னையை நனைக்க! கார்மேகங்கள் சூழ்ந்து மழை பொழிகிறது; கார்மேக வண்ணன் பிறந்த பொன் நாளிது! :thumbsup