காத்திருக்கும் காதல் அவரை சுவரில் படர, அவனோ என்னில் படர, அருகினில் தான் இல்லை, அதுவே எனக்கு வேதனை, காதலுக்கு வந்த சோதனை, வேதனை மாற்றி, சோதனை அகற்ற, விரைவினில் எனை நாடி வாராயோ, சடுதியில் வந்தென்னை அள்ளி அணைத்திடு, காதலுக்கு மரியாதை நான் தர, காதலிக்கு மரியாதை நீ தந்திடு.
chennaiyin baathippu innum theerala pola.... avarai suvaril padara.... cha.. yenna thought da saami....:biglaugh
அவரை சுவரில் படர அது கண்டு அவளும் அரை குறை ஆசையில் நிற்க அவனோ அரைவேக்காடாய் அலங்க மலங்க அடித்துக் கொண்டாள் தலையில். ரோதனை !!!!!!! காதலுக்கு வந்த சோதனை காதலுக்கு மரியாதை தர காதலி போனாள். வேதனை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தான் காதல். பிரிந்திருக்கும் போது தான் காதலின் ஆழம் அதிகரித்து, அதிலேயே ஆழ்ந்து போகத் தோணும். ஒரு பெண்ணின் பார்வையில் அவள் காதல் வேதனையை அவளை விட சிறப்பாய் சொன்ன விதம் வெகு அழகு ஜே வீ. :thumbsup