காது கேட்காது! தான் சொல்வது மனைவிக்குக் கேட்பதில்லை எனத் தன் மன வருத்தம் அதிகரித்தபடியே இருந்த ஒருவர், தன் மனைவிக்குக் காது கேட்காது என்று சொல்லி, தன்னிடமே என்ன வைத்தியம் செய்யலாம் என்று கூறுமாறு நல்ல மருத்துவரைப் பணிக்க, அவரோ 'கூறுவது கடினம், நோயாளியைப் பாராது', என்றிட, 'மனைவி வருந்துவாள், தங்களிடம் கூட்டி வந்தால்; எனவே தாங்கள் வேறு வழி கூறுங்கள்'. எனக் கேட்க, மருத்துவர் சிறிது யோசனைக்குப் பின் உரைத்தார், 'மருத்துவம் செய்யலாம்; எத்தனை தூரத்திலிருந்து காது கேட்கிறது என அறிந்து வாருங்கள்'. என்று கூற, காது வலிமை அறியப் பரீட்சையைத் தொடங்கினார்! சமையல் அறையில் சப்பாத்தி இட்டபடிக் குனிந்திருந்த சமையலரசி மனைவியை, 'மாலை என்ன டிபன்?' என்று இருபது அடி தூரத்திலிருந்து கேட்டார்; பதிலே இல்லை; இன்னும் ஐந்தடி சென்று, மீண்டும் கேட்க, பதில் இல்லை! இன்னும் ஐந்தடி அருகில் சென்று, மீண்டும் அதே கேள்வி; இன்னும் பதிலே வரவில்லை; மிகவும் மனம் சலித்தபடி, இன்னும் மிக அருகில் சென்று, அவள் காதருகில் நின்று, இன்னும் ஒரு முறை கேட்க, திடுக்கிட்டு பயந்த மனைவி, 'எத்தனை தடவை அதையே சொல்வேன்? நான் சொன்னது இத்தனை தடவையும் கேட்கவே இல்லையா?' என்றாள்! :rant