அவள் அந்த ஆலமரத்து நிழலில் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தாள்.தன் அன்புக்கு உரியவனை தேடி அவள் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது.தலை குனிந்து தன கால் நகம் பார்த்து கொண்டு இருந்த போது அவள் அருகே யாரோ அமரும் அசைவு ஏற்பட்டது.அவள் தன் தலையை நிமிர்த்தாமலே யார் என்று புரிந்து கொண்டாள்.அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவனுக்கு மனம் வலித்தது.அவள் அருகே நெருங்கி உட்கார்ந்தான்.அவளோ இன்னும் தள்ளி சென்று அமர்ந்தாள். இதனை கண்டதும் அவனுக்கு கோபம் வந்தது..”ஆஹா நாம் நமது தோழிகளுடன் சிரித்து பேசியதை பார்த்து தவறாக நினைத்து இருக்கிறாள் “என்று தன்னை தானே நொந்து கொண்டு அங்கிருந்து விர் என்று பறந்து சென்றான்.அவன் சென்றதும் அவள் மனம் கலங்கி தவித்து நின்றாள். சிறிது நேரத்தில் .அந்த ஆண் குருவி மீண்டும் வந்து அவள் அருகே அமர்ந்து ,வாய் நிறையகொண்டு வந்த உணவை தன் பிரியமானவளுக்கு ஊட்டி விட்டது .அந்த பெண் குருவி வீண் சந்தேகம் கொண்டோமே என்று தன்னை தானே திட்டி ,கண்ணீர் விட்டது. அந்த ஆண் குருவி “எனக்கு நண்பர்கள் பலர் உண்டு.ஆனால் என் துணைவி நீ ஒருவளே “ என்று சொல்லி, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தது.