கொள்ளை கொள்ளையாய் ஆசைகள் சின்ன சின்னதாய் கனவுகள் அழகிய மணல் வீடாய் கரைதனில் பேரலைகள் அடித்து சென்றன ஆசைகளை கனவுகளை விட்டு சென்றன மனக் கவலைகளை வாழ்வின் சுமைகளை இதயத்தின் வலிகளை வருத்தும் வேதனைகளை துரத்தும் வெறுமையை சுமைதாங்கியும் இடிந்து விட அனைத்தையும் விட்டு விட தான் ஆசை வழியோ தெரியவில்லை !