யதார்த்த வாழ்வில் ஒரு துன்பம்! கருணையா? கொலையா? மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணியவள், மக்களைக் காக்கும் செவிலியாகப் பணியில் சேர்ந்தாள். துள்ளித் திரியும் இளய வயதில், ஒரு கொடிய காமுகன், அள்ளிச் சென்றான் அவளின் இன்ப வாழ்வை, நொடியில். கழுத்தில் சுற்றிய கம்பி, மூளையை ஸ்தம்பிக்க வைத்து, அழுத்தி, அவளை ஒரு பயனில்லா உருவமாய் ஆக்கியது! தன் நிலையே மறந்தாள்; உணர்ச்சியும் இன்றிப் போனாள், தன் மூச்சு மட்டுமே அவளது உயிர்த் தன்மையைக் காட்ட! முப்பத்தியெட்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட, அவள் இப்போது முதுமையில் பல அடிகள் வைத்துவிட்டாள்! மயங்கியே கழிக்கும் இவ்வாழ்விலிருந்து முடிவளிக்க, தயங்கியே முறையிட்டார் ஒருவர், உயர் நீதிமன்றத்தில்! கருணைக் கொலைக்கு முன்வைத்த மனுவை, நீதிபதி, கருணை மனம் கொண்டு, நிராகரித்துத் தீர்ப்பளித்தார்! அவளைப் பராமரிக்கும் செவிலித் தோழிகள், தீர்ப்பினை, அவள் வாயில் இனிப்பு இட்டு, மகிழ்ந்து கொண்டாடினர்! முதுமை வந்து, உபாதைகளால் அங்கமெல்லாம் தேய்ந்து, பதுமை எலும்புக்குத் தோல் போர்த்தியதுபோல ஆனாளே! சாதிக்க வேண்டிய இளசுகள் பலரை அழைக்கும் இறைவன், பாதிக்கப்பட்ட இவளுக்கு, என்று விடுதலை தருவானோ? கருணைக் கொலை, கருணையா, கொலையா எனக் கேட்டு, இதனைச் சிந்தித்தால், விடையும் கிடைக்குமா? அறியேன்! :spin
In this situation I feel Mercy killing is better than her suffering. Its really painful (pain that cannot be explained in words ) being like that. Very different thinking!!
Hi raji, Very touching!!! May Aruna's suffering come to an end soon. Hope God listens to your plea!! Saras
Dear friends, Thanks for your supportive comments... நெஞ்சம் கலங்கியது அருணாவின் நிலைமை கண்டு! நஞ்சும் அவளுக்கு அமிர்தமாகத் தெரியுமோ, இன்று ? :idea