அன்று காலையும் வழக்கம் போலவே, பதிவுச் சீட்டுகள் பறக்க, தொடர்ந்தது. "நூற்று நான்கா?" எனக் குரல் மிகவே கொடுப்பவன் கவனம் சற்றே கலைந்தது. மருத்துவர் வர இரு மணி இருக்க, கூட்டம் அப்போதே வலுத்திருந்தது. கிடைத்த இடங்களில் சிலரும் முடங்க பலரை வெயில் "நலமா?" என்றது. மருத்துவர் செருமியும், இருமியும் வர, அவர் அறைவாயில் மறைந்து போனது. அவரது அதட்டலில் அவ்விடம் மெல்ல ஒருவழியாய் ஒரு ஒழுங்குக்கு வந்தது. எண்ணைச் சொல்லி ஆட்களை அனுப்பி, அவ்வப்போது மருந்து கடைக்கு ஓடி, மக்கள் பொருமலை, வெறுப்பைத் தாங்கி நிமிர்கையில் நேரமோ மூன்றைத் தாண்டி. மதிய உணவுக்கு மருத்துவர் கிளம்ப, அச்சிறு பையன் அவரிடம் மெல்ல, "இருமல் எப்படி இருக்கு இப்ப?" எனவே, கடுத்த அவர் முகம் கனிய "பரவாயில்லை! " எனத்தலையாட்டி, "சாப்பிடு தம்பி!" என்றே சொல்லி, புன்னகையுடனே அவரும் செல்ல, வந்ததோர் நாயும் அவனிடம் துள்ளி.