வானமும் பூமியும் வரும் என் கனவில் மலையும் வயலும் விரியும் என் கனவில் அலையும் கடலும் ஆர்பரிக்கும் என் கனவில் பூக்களும் சோலைகளும் பூக்கும் என் கனவில் பிரபலங்களும் வருவர் வீட்டுக்கு என் கனவில் மாலையும் மரியாதையும் கிடைக்கும் என் கனவில் மகிழ்ச்சியும் வருத்தமும் வரும் என் கனவில் சொந்தமும் பந்தமும் சூழும் என் கனவில் இனிப்பும் காரமும் இருக்கும் என் கனவில் இளமையும் முதுமையும் இணையும் என் கனவில் ஏனோ ...? நிகழ்காலம் மட்டும் வருவதில்லை என் கனவில்!
நிகழ் காலமே நிகழ்திக்காட்டத் தானே, பகலென்று ஒன்று வாழ்க்கையில் நித்தமும் உதிக்கிறது. கனவில் வருவது நிகழலாம், பகலில் விரும்புவதை நிகழ்த்துவோமே...