ஒற்றை மேகம் கதிரவனை மறைக்க ஒற்றையடிப் பாதையில் கடந்தகால நினைவுகளை நிறுத்திய மிதப்பில் கர்வத்தோடு பயணிக்க கண்ணில் பட்ட இரண்டு அன்னபறவைகள் நேற்று கண்ட கனவை கண்முன் நிறுத்த அழகிய இளஞ்சிவப்பு உடையணிந்து சிரித்து பேசி மகிழ்வித்து கனவில் வருகைதந்த கணங்களை எவ்வாறு நிறுத்தி வைப்பேன்? இதயத்துடிப்பாய் ஆழ்மனதில் பதிந்துவிட்ட எண்ணங்களை எவ்வாறு புறக்கணிப்பேன் கனவிலும் நினைவிலும் ?
லக்ஷ்மி ! வெகு நாட்களுக்குப் பின் உங்கள் கவிதை ! அழகிய கனவு ! இளஞ்சிவப்பில் வருகை தந்தவர் பெண்மையின் அடையாளம், மென்மையான அன்பின் குறிப்பு. இழந்த ஒன்று திரும்புதலின் உத்திரவாதம். எப்படிக் கொண்டாலும் மிகவும் நேர்மறைக் கனவுக்குறிப்பு. மனதில் மகிழ்ச்சி நிறைக்கின்ற கனவு. அன்னங்களின் காட்சி,உடல்நலம் தேறுதல் மற்றும் மன ஆறுதலுக்கான அடையாளமே !
as good as THAMARAI . wish I could put my platitudes in Chaste Tamil. vazhka valarga thaangalum thngal kavithvamum. ponnana velawyil allathdu Malayil pannaga ezhudhureenga.
மிக்க நன்றி பவித்ரா ! ஊக்குவிக்கும் தங்கள் வார்த்தைகளை வாழ்த்துக்களாகவே ஏற்கிறேன். என்ன செய்தாலும் கனவுகள் விடுவதாக இல்லை. மகிழ்ச்சி தருபவை என்றால் ரசித்துவிட்டு போகலாம்.
லக்ஷ்மி நீண்ட நாட்களுக்கு பின் படமும் கவிதையும் கண்டு மகிழ்ந்தேன் .கனவுக் கன்னி அல்லவா நீங்கள் .உங்கள் கற்பனை மிக நேர்த்தி
மேகத்தில் உன் முகம் கண்டான் வீசும் காற்றில் உன் துகில் கண்டான் மின்னலில் உன் கண்ணொளி கண்டான் இடிக்கும் இடியில் உன் கோபம் கண்டான் மழைச் சாரலில் உன் அன்பை கண்டான் நீ காணும் கனவில் அவன் அவன் காணும் உலகில் நீ
மிக்க நன்றி பெரியம்மா. என் கனவுலகம் என்றுமே அழகான ரம்மியமான நான் நேசிக்கும் ஆன்மாக்களை சந்திக்கும் இடம்