கடி (ன) நகை 1) அவன் ஏன் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுகிறான்? ஏன்னா, அவன் ' கண்டதை ' எல்லாம் சாப்பிட மாட்டானாம்! 2) காலில் சக்கரம் ஏறிய குழந்தை எப்படி கத்தும்?' வீல் Wheel 'என்று! 3) பத்திரிகை ஆசிரியர் எப்படி தும்முவார்? "அச்சுக்கு அச்சுக்கு" என்று! 4) அவர் நோட்டீசை படித்ததும் ஏன் தும்முகிறார்? அது ‘பொடி' எழுத்தில் இருப்பதால்? 5) சத்தம் போட்டு விற்பவர் யார்? “கத்தி" வியாபாரம் செய்பவர்! 6) " ராமன் எத்தனை ராமனடி" பாடலை விரும்பி கேட்ட நேயர்? ஆஞ்ச" நேயர்" ! 7) இராமாயண காலத்திலேயே ஆடப்பட்ட ஆட்டம் எது? “வாலி" பால்! 8) அவர் ஏன் குளிக்க போகும்போது ரெண்டு துண்டு கொண்டு போறார்? ஏன்னா,அவரது கொள்கை - "Wet" ஒன்று துண்டு ரெண்டு! 9) காந்திஜி ஏன் பல்செட் வைத்து கொள்ளவில்லை? ஏன்னா, அது "பொய்" ப்பல்! 10) "எப்படி, ஏன்" என கேட்ட தமிழ் புலவர் யார்? ஒள வை (How - Why) நன்றி வாட்ஸ்ஆப் என் அலுமினி குழு