கடவுளுக்குக் கடிதம்! பள்ளிக்கூடத்தில் சுற்றுலாவிற்குக் கூட்டிச் செல்ல அழைப்பு; துள்ளிச் சென்று சிறுமி சொன்னாள், அன்னையை அழைத்து. அந்தத் தாயோ மிக ஏழை; தேவையான பணத்தைக் கொடுக்க எந்த வழியுமே இல்லை என்று, வருந்திக் கூறினாள் மகளிடம். யோசித்து முடிவெடுத்த சிறுமி, மறுநாள் வேகமாய் எழுந்தாள்; யாசித்துக் கடவுளிடம் பணம் வேண்டி எழுதினாள் ஒரு கடிதம், 'கடவுளே! எனக்கு நூறு ரூபாய் பணம் மிக விரைவாய்த் தேவை! கடிதம் கண்டவுடன் கொடுத்து அனுப்பி விடுங்கள் எனக்கு', என. கடவுளுக்கு விலாசமிட்ட அக் கடிதத்தை எடுத்த தபால் ஊழியர், கடவுளுக்கு எழுதிய வரிகளை ஆவலுடன் படித்து, நெகிழ்ந்தார்! தன்னால் ஐம்பது ரூபாய்தான் தர முடியும்; மீதியை எவரேனும் முன்னால் வந்து அளிக்கட்டும், என்று எண்ணி, சிறுமி வீட்டிற்கு மறுநாள் சென்று பணத்தைத் தந்தார், சிறுமியின் அன்னையிடம்; மறு பாதிப் பணத்தை எவர் தருவாரோ என அன்னை வியந்தாள்! மாலை வந்த மகளிடம், ஐம்பது ரூபாய் 'போஸ்ட் மேன்' மாமாவே வேலை நேரத்தில் வந்து அளித்ததாகச் சொன்னாள், மகிழ்வுடன்! அன்று இரவு மீண்டும் சிறுமி கடவுளுக்குக் கடிதம் எழுதி வைத்து, சென்று அஞ்சல் பெட்டியில் சேர்த்து விட்டாள், மறுநாள் காலை! கடிதம் எடுக்க வந்த தபால் ஊழியர், அன்றும் கண்டார் கடவுளுக்குக் கடிதம், அதே சிறுமி கையெழுத்தில்! ஆவலுடன் அதைப் படித்தார். 'மிக்க நன்றி கடவுளே, தங்கள் உடனடி உதவிக்கு! ஆனால், உடனே தக்க தண்டனை கொடுங்கள், எங்கள் 'போஸ்ட் மேன்' மாமாவுக்கு! ஐம்பது ரூபாய் மட்டும் தாங்கள் அனுப்பியதில் எனக்குத் தந்து, மீதி ஐம்பது ரூபாய் தராமல், அவர் தன்னிடமே வைத்துக் கொண்டார்!' mg:
Hello raji, ha..ha..ha..:biglaugh That's the way of the world.Poor postman uncle!! However very enjoyable Verses therecheers Saras