தங்கம் வெல்லுவதில் முதல் இடம் என்றும் தங்களுக்கே என்று கொக்கரிக்கும் ஒரு நாடு! சின்னஞ் சிறுசுகளைக் கொடுமைப் படுத்தி, எண்ணும் இலக்கை அடைகிறது அந்த நாடு! பிஞ்சிலேயே பெற்றோரிடமிருந்து பிரித்து, நெஞ்சில் விதைக்கிறார் தங்க வேட்கையை! அடிபட்டு, மிதிபட்டு, அழுது, அரற்றி, இலக்கை அடையப் பயிற்சிகளை விடாது செய்கின்றார்!! நெஞ்சை நெகிழ வைக்கின்றன, ஈரம் இல்லா நெஞ்சு கொண்ட பயிற்சியாளரின் செயல்கள்! எப்படியும் தங்கம் வேண்டும் என்ற வெறியை இப்படித்தான் செயலாக்க வேண்டுமா? நமது இந்தியா தங்கம் வெல்லாதிருப்பது மேன்மை! சிந்திக்கவே பயங்கரமான செயல்கள் இல்லை!