ஒரு தேவாலயத்தைப் புதுமையாக்க விரும்பிய ஒரு பாதிரியார், நூறாண்டுகள் பழைமை வாய்ந்த கடிகாரத்தையும் மாற்ற விழையாததால், அந்தக் கடிகாரத்தின் அருகிலேயே புதியதை வைக்குமாறு பணியாளரிடம் கூற, புதிய டிஜிடல் கடிகாரம், தன் பணியில் தளராத பழையதின் அருகிலே வந்தது! பெருமையுடன் துள்ளி வந்த அந்தப் புது கடிகாரம், அருமையான குரலில் நண்பனை அழைத்து, 'இங்கு எத்தனை ஆண்டுகளாக இருக்கிறாய்?' என வினவ, 'எத்தனை ஆண்டுகளா? சுமார் நூறு!' என்று பதில்! புதிய கடிகாரம் மனக் கணக்கில் முழுகிப் போனது! புதிய கணக்கால் இதயம் நின்று போனது! அது ஏன்? ஒரு நொடிக்கு ஒரு துள்ளு என, ஒரு நிமிடத்தில் 60; ஒரு மணிக்கு 3,600; ஒரு நாளுக்கு 86,400; என்றால்... ஓர் ஆண்டில் 3,15,36,000 என மூன்று கோடிக்கு மேல்! நூறு ஆண்டுகளில் முன்னூறு கோடியைத் தாண்டும்! 'ஏன் நின்றுவிட்டாய்?' எனப் பழைய கடிகாரம் வினவ, 'நான் போட்ட கணக்கால்தான்!' என்றது அந்த டிஜிடல்! 'ஒரு துள்ளு துள்ளுவாயா?' என்று கேட்டதும், 'நான் ஒரு துள்ளு துள்ளுவது கடினம் அல்லவே' என்றபடி, துள்ளிக் காட்டியது டிஜிடல்! 'நூறாண்டை எண்ணாது, துள்ளும் அடுத்த நொடியை மட்டும் நினைத்துப் பார்!' என்று முதிய நண்பன் கூறக் கேட்டதும், ஆவலுடன் அன்று முதல் துள்ளிச் சென்றது, டிஜிடல் கடிகாரம்! வாழ்க்கை முழுவதையும் எண்ணி மலைத்திடாமல், வாழ்வோம் இனிதே அன்றைய பணிகளைச் செய்து! உலகம் உய்ய வேண்டும், ராஜி ராம்
Dear RGS, This story was sent across to me by my sister and I wrote it in this format! Thanks a lot for your appreciation. R R