என் வீட்டு வாசலில்.... என் வீட்டு வாசல் நோக்கி, முதல் நாள்... பச்சை வண்ண உடை உடுத்தி, முகம் நிறைய செம்மை பூசி, வாயில் சிவப்பு வட்டம்மிட்டு, கதையை கையில் ஏந்தி, ஆர்மோனிய பெட்டியுடன், அனுமன் வந்தான்! மற்றொரு நாள்... இடையில் மஞ்சள்,மேலே நீலம் உடை தனை தாங்கி, முகமெல்லாம் நீல நிறமாய்,வில்தனை தரித்து, ஆர்மோனிய பெட்டியுடனே, ராமன் வந்தான். இசையுடன் ராம நாமம் கேட்டு ஓடோடி வந்தேன், ராம நாமம் சொல்லி,கையெந்தும்,அவனை நோவதா? அல்லது,அவனாவது,ராம நாமம் சொன்னானே என மகிழ்வதா?
தீபா கவிதை நன்று. ராம நாமம் சொல்லியது யாராயினும், அதையே தொழிலாய் வைத்து அவன் கையேந்தி பிழைத்தல், நமக்கு இடும் நாமம் அன்றி வேறொன்றும் இல்லை என்பது என் கருத்து.
deepa ka arumaiyaana kavithai avan than pilaipai nadaththa rama naamam solkiraan silar matravar pilaipai kedukka rama naamam solkindranar ivarkalukku avan evvalavo paravaayillai