1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வரிகளில் - என்னவளே அடி என்னவளே எந்தன் &#29

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Oct 27, 2014.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    தென்னவளே என்னை திண்ணவளே
    அடி நீ எழில் ராட்சசியா ??
    கண்டபின்னும் எனை கொல்வதுமேன்
    அடி உனக்கென்ன உயிர் பசியா ??

    என் கால்நூற்றாண்டு வாழ் காலம்வரை
    உயர் காதலை தேடி நின்றேன்
    உயிர் காதல் என்றால் அது நீயேயென்று
    உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்

    எந்தன் ஆயுளதும் மண்ணில் சாயும்வரை
    உந்தன் காதலில் கலந்திருப்பேன்

    தென்னவளே என்னை திண்ணவளே
    அடி நீ எழில் ராட்சசியா ??

    வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
    இங்கு தமிழ் மொழி இல்லையடி
    பால் பொழியும் அடி தேன் மொழியே
    உன்னை பார்த்ததால் கொண்டதடி

    தாழ்ந்திருக்கும் இமை தாழ் திறந்தால்
    நிந்தன் எழில் முகம் தரிசனமே
    ஆழ்ந்திருந்தும் என்னில் வாழ்ந்திருந்தும்
    என்மேல் உனக்கில்லை கரிசனமே

    இங்கு மண்ணிலா அங்கு விண்ணிலா
    எங்கு சொல்லடி பூங்கொடியே
    என் வாழ்க்கையின் நிரந்தர சொர்கமே
    அடி பூ உந்தன் பூ மடியே ..

    தென்னவளே என்னை திண்ணவளே
    அடி நீ எழில் ராட்சசியா ??

    காதலியே துளி பார்வை தந்தால்
    அமை வாதை (அமாவாசை ) க்கு ஒளி அளிப்பேன்
    கச்சை கொண்ட இச்சை பூக்கள் கொண்டு
    உலக பூக்களை வம்பிழுப்பேன்

    வீட்டுவேலை செய்து நீ ஓய்ந்துவர
    உன்னை மடியினில் சாய்த்திடுவேன்
    சாய்ந்ததுமே நீயும் தூங்கிடவே
    கை கால்களை பிடித்துவிடுவேன்

    என் ஆயுளின் மீதியை - உன்
    ஆயுளில் சேர்த்து வைப்பேன்
    உன்னோடு வாழ்கின்ற மிதமீத நாட்களே
    என் வாழ்நாள் என்றுப்பேன் ....

    தென்னவளே என்னை திண்ணவளே
    அடி நீ எழில் ராட்சசியா ??
    கண்டபின்னும் எனை கொல்வதுமேன்
    அடி உனக்கென்ன உயிர் பசியா ??

    என் கால்நூற்றாண்டு வாழ் காலம்வரை
    உயர் காதலை தேடி நின்றேன்
    உயிர் காதல் என்றால் அது நீயேயென்று
    உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்

    எந்தன் ஆயுளதும் மண்ணில் சாயும்வரை
    உந்தன் காதலில் கலந்திருப்பேன்
     

    Attached Files:

    Loading...

Share This Page