ஒத்தையடி பாதையில துள்ளியோடி போகையில ரெட்டச்சட புள்ள ஒன்ன ஓரக்கண்ணில் நானும் பாத்தேன். ஒயிலாட்டம் ஒன்தன் நட குயிலாட்டம் ஒன்தன் குரல் கல்லான என்ன அது கொல்லாம கொல்லுதடி . அப்பன் பேச்சு கேட்கவில்ல ஆத்தா சொல்லு விளங்கவில்ல நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி பைத்தியமா போனேனடி. சருகாக ஆனேன் நானே கருவாடா போனேன் நானே புரியாம பேசும் புள்ள என் மனக்காயம் புரியலையா இரும்பான நெஞ்சுக்குள்ள உன்ன விட்டா யாருமில்ல புல்லாக நீயும் பார்த்தா பித்து கொள்ள தோணுதடி . கண்ணுக்குள்ள தாங்குவேண்டி ராணி போல பார்த்துப்பேண்டி பொக்கைவாயா போன பின்னும்- உனக்கு நிலா சோறு ஊட்டுவேண்டி கண்ணாலம் பண்ணிக்கிட மனசார சம்மதிடி சம்மதிச்சா சந்தோஷம்தான் இல்லேயினா என் சந்தோஷத்துக்கு எப்போதும் தோஷம்தான்.
AB, கிராமத்துக் காதலன் பத்தி அசத்தலாக எழுதி இருக்கீங்க!! thumbsup Ennoda esapaatu: ஆச ராசாவே, வூட்டுக்கு வந்து கண்ணாலம் பேச நீங்க வரோணும்னு ஆருக்கு தெரியாம ஆத்தோரத்து அம்மனுக்கு தெனம் வெளக்கு போட்டுட்டு வாறேனு ஒங்களுக்கு எப்டி வெளங்க வைப்பேன்? நிலாவையும், கயத்து கட்டிலயும் பார்த்து ஒங்க நினைப்பாலே தேஞ்சு துறும்பா இளச்சு போவறத ஒங்களுக்கு எப்டி விளங்க வைப்பேன்? தாலிய கட்டு ராச நெஞ்சுக்குள் ஒங்கள பொத்தி வச்சு ஆயுள் பூரா பார்த்து பார்த்து ரசிப்பா இந்த காதல் கிறுக்கி