நிறம் பார்த்தா உன்னை காதலித்தேன்? உன் மனம் பார்த்து தான் உன்னை என் மனதில் ஏற்றினேன் உனக்கு ஏன் தாழ்வுணர்ச்சி? யார் எழுதி வைத்த சட்டமிது? ஆண் கருப்பாகவும் பெண் சிவப்பாகவும் இருக்க வேண்டுமென? உனக்கென்ன குறை கண்ணம்மா நீ எப்போதும் என் தேவதை தான் உனக்கு பதிலாக தான் நான் பிறந்திருக்கிறேனே சிவப்பாக? உன் கருமை பார்த்த பின் தானே கருப்பின் மேல் எனக்கு மையம் வந்ததே? எது உன் நிறம் என்றாலும் எப்போதும் நீ என்னவள் தான் நிறம் அல்ல பெண்ணே காதலை தீர்மானிப்பது மனம் அல்லவோ நிரந்தரம் காதல் வாழ
நிறம் நிரந்தரம் அல்ல அப்பழுக்கில்லா மனமே சுகம் தரும்... காதலுக்கு வெண்மை ,கருமை இல்லை. அதற்கு தேவை உண்மை... மிக அழகிய கருத்து நன்றி
Correct Sanjay... காதலுக்கு color தேவையில்ல... ஏன்னா காதலுக்கு கண் இல்ல Yams உன் வினோதமானவளே வ சுட்டு இங்க கவித எழுதி இருக்காரு sanjay... Copy right துட்டு வாங்கிட்டாய
காலை மலர்ந்த பூக்களின் நிறம் மாலை வந்தால் தானே மாறிவிடும் காலம் காலமாய் மாறாத நிறம் என்பது காதல் பூக்களுக்கு மட்டும் தான் என் கண்மணி என அழகா சொல்லிட்டீங்க சஞ்சய்
"நிறம் அல்ல பெண்ணே காதலை தீர்மானிப்பது மனம் அல்லவோ நிரந்தரம் காதல் வாழ" How true and well said "உன் கருமை பார்த்த பின் தானே கருப்பின் மேல் எனக்கு மையம் வந்ததே?" In my view "maiyal"-"kaadhal" would be more apt than "maiyam"(center point). Tell me if I have misunderstood.
clapclap:clapமிகவும் தெளிவான சிந்தனை Jay. நீ எழுதிய வரியில் உன் எண்ணங்கள் மின்னுகின்றன அழகாய்! thumbsup காதலிக்க எல்லாராலுமே முடியும். ஆனால் அதற்கான தகுதிகள் சிலருக்கு மட்டுமே உண்டு. அதில் நீ ஒருவன் என்பதில் எப்போதும் போல இப்போதும் எனக்கு மகிழ்ச்சியே :cheers