1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எனக்குப்பிடித்த கவிதைகள் (1

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Nov 18, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,584
    Likes Received:
    10,781
    Trophy Points:
    438
    Gender:
    Female
    .எனக்குப்பிடித்த கவிதைகள் (1 - 15):
    1. "ரேசன் கடைக்காரருக்கு
    குழந்தை பிறந்தது....
    எடை குறைவாக...!"
    2. "வராந்தாவிலேயே
    இருந்த
    வயதான தந்தை....
    இறந்த பின்
    ஹாலுக்குள் வந்தார்
    புகைப்படமாய்...!"
    3. “வீட்டின் பெயரோ
    அன்னை இல்லம்..!
    அன்னை இருப்பதோ
    முதியோர் இல்லம்..!”
    4. " புறாக்கள் வளர்க்கும்
    எதிர் வீட்டுக்காரர்
    என்னிடமிருந்து பறிக்கிறார்
    பூனை வளர்க்கும்
    சுதந்திரத்தை...."
    - நா. முத்துக்குமார்.
    5. " பறித்த மலரை
    ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
    கல்லறையில் வைத்தாலென்ன?
    மலருக்கென்னவோ
    பறித்ததுமே வந்துவிட்டது
    மரணம் ! "
    6. “சர்க்கரை இல்லை...
    கொழுப்பு இல்லை...
    எஜமானரோடு
    வாக்கிங்
    போகுது
    ஜிம்மி...!”
    7. "வேலிக்கு வெளியே
    தலையை நீட்டிய என்
    கிளைகளை வெட்டிய
    தோட்டக்காரனே...!
    வேலிக்கு அடியில்
    நழுவும் என் வேர்களை
    என்ன செய்வாய்...?"
    -- மு. மேத்தா.
    8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
    பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
    திரும்பவும் அவர்களை
    ஒன்று சேர்த்து வைக்கிறது
    ஹோட்டல் சாம்பார்!"
    --S. செல்வகுமார்
    9. "பேருந்தில்
    சிதறுகிறது நாணயங்கள்....
    தேடலுக்குப்பிறகு
    கிடைத்தன....
    சில நாணயங்கள்
    தொலைந்தன...
    சிலர் நாணயங்கள்...!"
    -ப. உமாமஹெஶ்வரி.
    10. "பேற்றின் வலியோடு
    அலறும் குரலில்
    இணைந்தே ஒலிக்கிறது
    என் நிர்வாணத்துக்கான
    அழுகையும்...!"
    -- அ. வெண்ணிலா.
    11. "கோழித்திருடனை
    ஜெயில்ல போட்டாங்க...
    ஜெயில்ல அவனுக்கு
    கோழிக்கறி போட்டாங்க..!"
    -- ஒப்பிலான்.
    12. "மாங்கல்யத்தின் மகிமையை
    மனைவி அறிவாள் …
    மணவாளன் அறிவான் …
    அவர்கள் இருவரையும் விட
    மார்வாடியே
    அதிகம் அறிவான்...!'
    -- கவிஞர் தமிழன்பன்.
    13. "காற்றில் பறந்து
    பறவை மறைந்த பிறகும்
    கிளை தொடங்கிய
    நடனம் முடியவில்லை !"
    - நா. முத்துக்குமார்.
    14. "உடைந்த பொம்மை
    அழாத குழந்தை
    கவலையோடு அப்பா..!"
    -- சிவா.
    15. பிள்ளையார் சுழி
    "ஆற்றங்கரைப்
    பிள்ளையாருக்கு
    கிராமத்துப்
    பெண்டுகள் மீது
    கோபமோ கோபம்.
    ஆண்டவனாய்
    என்னை
    வணங்காவிட்டாலும்
    பரவாயில்லை.
    ஒரு ஆண் பிள்ளையாய்
    நடத்தக்கூடாதா?
    குளித்துவிட்டு வந்து
    ஈரப்புடவையை
    என் பக்கம் திரும்பி நின்றா
    மாற்றிக் கொள்வார்கள்.
    சீச்சீ!"
    தொகுப்பு :::: பொன்இதழ் பிரபுலிங்கம்
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. sln

    sln Finest Post Winner

    Messages:
    2,156
    Likes Received:
    2,115
    Trophy Points:
    283
    Gender:
    Male
     
  3. sln

    sln Finest Post Winner

    Messages:
    2,156
    Likes Received:
    2,115
    Trophy Points:
    283
    Gender:
    Male
    Excellent compilation.Has taken me back to Kannadasan days with Sivaji walking across hills and brooks.
     
    Thyagarajan likes this.

Share This Page